Saturday 17 May 2014

காதலில் வெற்றி பெற --மினி ஜோதிட டிப்ஸ்...

ஒரு பெண் ஒரு ஆண் மகனை விரும்பினாலோ-ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினாலோ சாதரணமாக அதை காதல் என்பது வழக்கம். இதில் உண்மையிருந்து. இருவருக்கும் அன்பின ஆழம் அதிகமாகி இணைபிரியாதவர்கள் என்று ஆகும் போது உருவாகும் நெருக்கம் ஈடு இணை இல்லாத்து.உடல் ஒன்று உயிர் இரண்டு என வாழ்பவர்கள். எதற்காகவும் விட்டு விட்டு ஓடி விடாமல் இறுதி வரை வாழ்பவர்கள்.இவர்கள் திருமணம் என்று வரும் போது ஜாதகம் பார்க்க போவது ஏன்..? இருவருக்கும் பொருத்தமில்லை பிரிந்து விடுங்களென்றால் பிரிந்து விடுவார்களா..?அதனால் காதலித்து விட்டீர்களா ஜாதகம் பார்க்காதீர்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். இன்னும் சிலர் காதலில் இணைய என்ன பரிகாரம் செய்யாலாமென்று கேட்பதுதான் கொடுமை.சிலர் ஏமாந்து மந்திரவாதிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாறுகிறார்கள்  நீங்கள் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக நம்பிய பிறகு ஜாதகம் ஏன்..? ஒரு ஆணும்-பெண்ணும் புதிதாக இணையும் போது கண்டிப்பாக ஜாதகம் பார்க்க வேண்டியதுதான்.ஆனால் காதல் என்று வரும் போது இது தேவையிலலாத்தாகும்.




ஜேஈதிடம் தெரிந்தவர்கள் ஓரளவு புரிந்தவர்களூக்காக சில டிப்ஸ்...

ஒரு ஜாதகத்தில் சூரியன்-சுக்கிரன் இணைந்தாலோ..பூர்வபுண்ணியம் கெட்டிருந்தாலோ...காலஸர்ப்ப தோஷம்-செவ்வாய் தோஷம்-இருந்தாலோ..12-மிடத்தில் பாவகிரகங்கள் இருந்தாலோ...சனி-செவ்வாய் சேர்ந்தோ-பார்த்தோ இருந்தாலோ...புதன் கெட்டிருந்தாலோ..லக்கினம் என்கிற விதி பலவீனபட்டிருந்தாலோ..சந்திரன் -3.6.8.12-ல் மறைந்தாலோ...இன்னும் பல விதி முறைகள் உள்ளது. இதெல்லாம் ஜேஈதிடத்தை நம்புபவர்களுக்காக...
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates